முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் போட்டோ ஷூட் விதிமீறல்: மன்னிப்பு கோரி இயக்குனர் விக்னேஷ் சிவன் கடிதம்

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      சினிமா
Nayantara-Vignesh 2022 06 0

Source: provided

சென்னை : திருப்பதி கோவிலில் நடந்த விதிமீறலுக்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரினார்.  

 விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் கடந்த 9-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இருவரது திருமணத்துக்கும் இந்திய அளவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். 

திருமணத்துக்கு பிறகு நேற்று முன்தினம்  விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது சாமி தரிசனம் முடிந்த பிறகு கோவில் வளாகத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அப்பொழுது நயன்தாரா காலணி அணிந்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக விசாரணை நடத்தி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்திருந்தது.  

இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நடந்த தவறுக்காக மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், திருமணம் முடிந்த பிறகு வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி வந்து ஏழுமலையனின் கலயாண உற்சவத்தில் கலந்து கொண்டோம்.

அதன் பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்தபோது எங்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.  இதனால் அங்கிருந்து சற்று நேரம் வெளியேறி பின் மீண்டும் அப்பகுதிக்கு வந்தோம். அப்போது ஏற்பட்ட பரபரப்பில் காலணி அணிந்திருந்ததை கவனிக்கவில்லை என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து