முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 5 பேர் குழுவுக்கான அரசாணை வெளியீடு

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      தமிழகம்
tamilnadu-govt-30-06-20212

Source: provided

சென்னை : ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக விரைவில் அவசர சட்டம் கொண்டு வரப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் 5 பேர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அதில் ஆன்லைன் விளையாட்டுகள் தற்கொலையை தூண்டுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஆன்லைன் விளையாட்டுகள் உண்மையிலேயே திறன்களை வளர்க்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து