முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உப்பாறு அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2022      தமிழகம்
tamilnadu-govt-30-06-20212

Source: provided

சென்னை : திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், உப்பாறு அணையிலிருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும்  நிலங்களுக்கு பருவமழை காரணமாக பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்றும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், உப்பாறு அணையிலிருந்து  இன்று 15.06.2022 முதல் 04.07.2022 முடிய 1 சுற்றுக்கு 5 நாட்கள் வீதம் 2 சுற்றுக்களுக்கு மொத்தம் 161.57 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், திருப்பூர்  மாவட்டம்,  தாராபுரம் வட்டத்தில் 6060 ஏக்கர் நிலங்கள்  பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து