முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு தடைக்கல்லாக உள்ளது : அமைச்சர் துரைமுருகன் பேச்சு

புதன்கிழமை, 15 ஜூன் 2022      தமிழகம்
durai-murugan 2021 07 20

Source: provided

வேலூர் : காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு தடைக்கல்லாக உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.  

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கோரி கர்நாடக அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தத்தை கொடுத்து வருகிறது. இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா முதல்வரின் கருத்து சரியல்ல. கர்நாடகா முதல்வர்  பசவராஜ் பொம்மைக்கு காவிரி வரலாறு குறித்து தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

காவிரி விவகாரத்தில் இப்போது வரை கர்நாடகா அரசு தடைக்கல்லாக உள்ளது. காவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பையும் ஏற்று கொள்ளாமல் கர்நாடகா அரசு வாதாடுகிறது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து