முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒற்றைத் தலைமை பற்றி அ.தி.மு.க. பொதுக்குழுதான் முடிவு செய்யும் பொன்னையன் தகவல்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2022      தமிழகம்
Ponnaiyan-2022-06-16

Source: provided

சென்னை : ஒற்றைத் தலைமை எல்லாம் மற்றவர்கள் கிளப்புகிற பிரச்சினை. ஒற்றைத் தலைமை பற்றி கட்சியின் பொதுக்குழுதான் முடிவு செய்யும் என்று மூத்த தலைவர் பொன்னையன் கூறினார். 

அ.தி.மு.க. பொதுக்குழு வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்களை இறுதி செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவர்கள் பொன்னையன், செம்மலை, முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. மூத்த தலைவர் பொன்னையன் கூறியதாவது, 

ஒற்றைத் தலைமை குறித்த கேள்வியே தேவையற்ற கேள்வி, அதுகுறித்து பொதுக்குழுதான் முடிவு செய்யும். பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி கட்டாயமாக நடைபெறும். ஒற்றைத் தலைமை குறித்து ஜோசியம் சொல்ல முடியாது. இந்த விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடுதான் என் நிலைப்பாடு. ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தனித்தனியாக பேசவில்லை. கண்ணும் இமையும் போல, நகமும் சதையும் போல இணைந்து செயல்படுகின்றனர்.

ஒற்றைத் தலைமை எல்லாம் மற்றவர்கள் கிளப்புகிற பிரச்சினை. அதுகுறித்து கட்சிதான் முடிவெடுக்கும். நகமும், சதையும் போல அ.தி.மு.க. ஒற்றுமையாக இருக்கிறது. ஊடகங்கள்தான் ஒற்றைத் தலைமை என்ற பேச்சை கிளப்புகின்றன. நாங்கள் கிளப்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து