முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் முறையாக ஒரேநாளில் வெளியாகிறது: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20-ல் வெளியீடு: தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

வியாழக்கிழமை, 16 ஜூன் 2022      தமிழகம்
School-Education 2022 02 11

தமிழகத்தில் முதல் முறையாக ஒரேநாளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் 20-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

9.5 லட்சம் பேர்...

தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மே 6 முதல் 30 ம் தேதி வரை நடைபெற்றது. 9.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 2-ல் தொடங்கி 10-ம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றன.

தேதி மாற்றம்...

இந்நிலையில், இன்று (ஜூன் 17) காலை 9 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று வெளியாகவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், ஜூன் 20-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் ஒன்றாக வெளியிடப்படவிருக்கின்றன. 

வரும் 20-ம் தேதி...

தற்போது இதை மாற்றி 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 20-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறைதெரிவித்துள்ளது. இதன்படி வரும் 20-ம் தேதி காலை 9.30 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். இந்த முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட வலைதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

குறுஞ்செய்தி... 

மேலும் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையதளம் மூலம் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மாணவர்கள், தங்களது தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரே தேதியில்...

பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை நடைபெற்றது. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது, இந்த இரண்டு பொதுத் தேர்வு முடிவுகளும் ஒரே தேதியில் வெளியிடப்படுகிறது. முதல் முறையாக தமிழகத்தில் இவ்வாறு இரண்டு தேர்வு முடிவுகளும் ஒன்றாக வெளியிடப்படவுள்ளன.

முடிவுகள் தயார்...

10 மற்றும் 12-ம் தேதி முடிவுகளை தனித் தனியாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இரண்டு தேர்வு முடிவுகளும் தயாராகிவிட்டதால் ஒரே தேதியில் முடிவுகள் வெளியிடலாம் என்று முடிவு செய்து, 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பே வெளியிடப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து