முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதி தீயை அணைக்காமல் இருந்தால் எதிர்கால சமுதாயத்தை அழித்து விடும் : மக்கள் நீதி மய்யம் கருத்து

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2022      தமிழகம்
Kamal 2022-06-17

Source: provided

சென்னை : சாதி என்னும் தீயை அணைக்காவிட்டால், அது எதிர்கால சமுதாயத்தை அழித்து விடும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவரிடம் சாதி ரீதியாகப் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது இதனைத்தொடர்ந்து ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மீனா ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

இந்நிலையில், சாதி என்னும் தீயை அணைக்காவிட்டால், அது எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை சாதி ரீதியாகப் பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இன்னமும் சாதி எனும் தீயை அணைக்காமல் இருந்தால், எதிர்கால சமுதாயத்தை அழித்து விடும்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஆசிரியர், பெற்றோர், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து