முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை கோரி ஐகோர்ட்டில் மனு

சனிக்கிழமை, 18 ஜூன் 2022      தமிழகம்
Chennai-High-Court 2021 3

Source: provided

சென்னை : அ.தி.மு.க கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது அ.தி.மு.கவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. எனவே பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் .

கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடந்த அ.தி.மு.க உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை நடத்த தடை விதிக்க வேண்டும்.

கட்சி விதிகள்படி நிர்வாக ரீதியாக பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களான பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல் மற்றும் உட்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றை அ.தி.மு.க கட்சி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்.

கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும். செயற்குழுவால் நியமிக்கப்பட்ட தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பதவியில் நீடிக்க தடை விதிக்க வேண்டும். கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதியதாக கட்சி பதவிகளில் நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து