முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: சென்னை ஐகோர்ட்டில் நாளை முதல் மீண்டும் கட்டுப்பாடுகள்

சனிக்கிழமை, 18 ஜூன் 2022      தமிழகம்
Chennai-High-Court 2021 3

Source: provided

சென்னை : கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து நாளை முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. 

சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் நுழையும் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவது, பாதுகாப்பான இடைவெளி கடைப்பிடிப்பது கட்டாயமாகிறது.

நீதிமன்றக் கட்டடத்திற்குள் வழக்குத் தொடுப்பவர்கள் அவசியமின்றி உள்ளே நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உயர் நீதிமன்றத்தின் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 

உள்ளே நுழைபவர்களுக்கு கட்டாயம் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் கைத் திரவம் கொண்டு கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும். மேலும், நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் அதிகம் கூடுவதைத் தடை செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து