முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒற்றை தலைமை விவகாரம்: இ.பி.எஸ்.க்கு அ.தி.மு.க. இளைஞரணி அணி ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      தமிழகம்
ADMK 2022-06-19

Source: provided

சென்னை : எடப்பாடி பழனிசாமியின் கீழ் ஒற்றை தலைமை அமைக்க அதிமுக இளைஞர் அணி அதரவு தெரிவித்துள்ளது. 

அதிமுக இளைஞர் அணி செயலாளர் சிவபதி மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். பின்னர், சிவபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இளைஞர் அணி மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்தோம். ஒற்றைத்தலைமை வேண்டும் என்று இளைஞர் அணி நிர்வாகிகள் கோரிக்கை வைத்தோம். 

4 ஆண்டுகள் ஆட்சியை எடப்பாடி சிறப்பாக வழிநடத்தினார். கொரோனா மற்றும் பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்பட்டார். இளைஞர்களின் நாயகனாக திகழ்கிறார்.  இளைஞரணி, இளம்பெண்கள் பாசறை ஆகியவற்றின் ஆதரவு 100 சதவீதம் எடப்பாடிக்கே. எடப்பாடி தலைமையில் ஒற்றைத்தலைமை வர வேண்டும். ஒற்றை தலைமை குறித்து எடப்பாடியிடம் தெரிவித்தோம். அவர் அதுகுறித்து பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி தலைமையில் அதிமுக வர வேண்டும் என்பதே எங்களது எண்ணம். இவ்வாறு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து