முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் வலுக்கும் ஒற்றைத் தலைமை விவகாரம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இடையே தூது போகும் மூத்த தலைவர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      தமிழகம்
EPS-OPS 2022 04 12

Source: provided

சென்னை : அ.தி.மு.கவில் வலுக்கும் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் நேற்றும் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

அ.தி.மு.கவில் தற்போது இரட்டைத் தலைமை முறையை முடிவுக்குக் கொண்டு வந்து ஒற்றைத் தலைமையாக மீண்டும் பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டுவர எடப்பாடி கே. பழனிசாமி முயற்சித்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். வரும் ஜூன் 23-ம் தேதி பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில், இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் கடந்த 4, 5 நாள்களாக தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலோசனை நேற்றும் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்ட தம்பிதுரை, பிறகு ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்குச் சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இவரைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை நடத்திய பிறகு ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்று ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து