முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கூட்டுக் குடிநீர் திட்டம்: சென்னையில் வரும் 1-ம் தேதி அமைச்சர்கள் ஆலோசனை

சனிக்கிழமை, 25 ஜூன் 2022      தமிழகம்
durai-murugan 2021 07 20

Source: provided

சென்னை : ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக ஜூலை 1-ல் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள ஆழியாறு அணையிலிருந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக, கூட்டுக் குடிநீர் திட்டம் ஒன்றை செயல்படுத்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உத்தேசித்துள்ளது. இத்திட்டத்திற்காக ஆழியாறு அணையிலிருந்து நீர் எடுப்பதற்கு பி.ஏ.பி பாசனதார விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே இப்பிரச்சனை குறித்து அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து, சுமூகத்தீர்வு காண்பதற்காக,  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் தலைமையில் 1.7.2022 அன்று, சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து