முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்: டி.ஜி.பி.யிடம் புகார்

சனிக்கிழமை, 25 ஜூன் 2022      தமிழகம்
Silenthra-Babu 2022 01 02

Source: provided

சென்னை : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க. முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக அவரது வழக்கறிஞர் பாலமுருகன் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பாக வழக்கறிஞர் பாலமுருகன் கூறுகையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது. வாட்ஆப் மூலமும் கொலை மிரட்டல் வருகிறது.  கொலை மிரட்டல் வந்த தொலைபேசி எண்களை குறிப்பிட்டு டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்திலும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்தும் புகார் அளித்துள்ளோம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளோம். இவ்வாறு வழக்கறிஞர் பாலமுருகன் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து