முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் அத்துமீறிய ரசிகர்கள் அதிரடி காட்டிய விராட் கோலி

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      விளையாட்டு
Untitled-3

Source: provided

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. கொரோனாவால் பாதியில் நின்றுபோன டெஸ்ட் தொடரை அங்கே மீண்டும் தொடரவுள்ளது. இதில் இரு அணிகளும் மோதிக் கொள்ளும் 5 ஆவது டெஸ்ட் வருகிற ஜூலை 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக லீசெஸ்டர்ஷயர் கவுண்டி அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.

போட்டியின் போது இந்தியாவின் ஐபிஎல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் கமலேஷ் நாகர்கோட்டி களத்தில் நின்றிருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர், கமலேஷை அணுகி செல்பி எடுக்க அணுகியுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்ததாக கூறப்படுகிறது. இவற்றை பெவிலியனில் நின்று கவனித்துக் கொண்டிருந்த விராட் கோலிக்கு கோபம் சுர்ரென்று வந்தது. உடனே தொந்தரவு செய்த ரசிகர்களை கடிந்து கொண்டார்.

அவர் இங்கே விளையாடத்தான் வந்திருக்கிறாரே ஒழிய, போட்டோ எடுத்துக் கொள்ள அல்ல, என விராட் கோலி அதிரடியாக கூறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். தற்போது இந்த வீடியோ நெட்டில் வைரலாகி வருகிறது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து