முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமானில் அடுத்தடுத்து 7 முறை தொடர் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      உலகம்
earthquake-2022-06-02

Source: provided

போர்ட்பிளேயர் : அந்தமானில் நேற்று காலை முதல் 7 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அந்தமான் கடல் பகுதியில் நேற்று காலை 11:05:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அது ரிக்டரில் 4.4 ஆகப் பதிவானது.   >அடுத்ததாக பிற்பகல் 1.55 மணிக்கு 4.5 ஆகவும், 2.06 மணிக்கு 4.6 ஆகவும் பதிவாகியுள்ளது.   

இதைத் தொடர்ந்து 2.37 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ஆகவும் அடுத்து 3.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது. 

3.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 256 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.   

இதன் தொடர்ச்சியாக, பிற்பகல் 3.25 மணிக்கு போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 205 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் 4.6 என்ற அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  7-வது முறையாக பிற்பகல் 3.39 மணிக்கு நிலநடுக்கமானது ரிக்டரில் 3.8 ஆகப் பதிவானது.   அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து