முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி அணையில் இருந்து இன்று முதல் நீர் திறக்க அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : கிருஷ்ணகிரி அணையில் இருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம்  கிருஷ்ணகிரி அணையின் வலது மற்றும் இடதுபுற பிரதானக் கால்வாய்களில்  2022 - 2023 ஆம் ஆண்டிற்கு முதல் போக பாசனத்திற்கு 06.07.2022 முதல் 02.11.2022 வரை 120 நாட்களுக்கு கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து