எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 4-வது நாளன்று இந்திய அணியின் ஆட்டம் பற்றி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது: மிகவும் வருத்தமாக உள்ளது. இந்திய அணி நன்கு பேட்டிங் செய்து இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை முழுமையாகத் தடுத்திருக்கலாம். இந்திய அணி 4-ம் நாளன்று முதல் இரு பகுதிகளிலும் பேட்டிங் செய்திருக்க வேண்டும்.
தடுப்பாட்ட முறையைக் கையாண்டார்கள். உணவு இடைவேளைக்குப் பிறகு பயத்துடன் விளையாடினார்கள். சில விக்கெட்டுகளை இழந்த பிறகும் கூட ரன் எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம். விரைவாக விக்கெட்டுகளை இழந்தார்கள். இதனால் இங்கிலாந்து அணி இலக்கை அடைவதற்கான போதுமான அவகாசத்தை அளித்து விட்டார்கள் என்றார்.
ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் இந்திய மகளிர் முன்னேற்றம்
ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர். ஸ்மிருதி மந்தனா 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டியில் 94 ரன்களை எடுத்ததன் மூலம் இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ந்துவரும் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ஷஃபாலி வர்மா 71 ரன்களை அடித்ததன் மூலம் 36வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்குமுன் 43வது இடத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 24வது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பவுலர், ஆல்ரவுண்டர் வரிசையில் முதல் 10 இடங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை.
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு சம ஊதியம்
நியூசிலாந்து அணிக்காக விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்குச் சம ஊதியம் அளிக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆடவர், மகளிர் என இரு பிரிவாக கிரிக்கெட் ஆட்டங்கள் விளையாடப்பட்டாலும் ஊதியம் வழங்குவதில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பொதுவாக ஆடவர் பிரிவில் விளையாடும் வீரர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும். இதனால் இரு தரப்பினருக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
இதையடுத்து வீரர், வீராங்கனைகளுக்குச் சமமான ஊதியத்தை வழங்க நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது. அதன்படி டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடும் நியூசிலாந்து ஆடவர், மகளிர் அணியினருக்குத் தலா ரூ. 5 லட்சமும் (10,250 நியூசி. டாலர்) ஒருநாள் கிரிக்கெட்டுக்குத் தலா 1.95 லட்சமும் (4,000 நியூசி. டாலர்) டி20 கிரிக்கெட்டுக்குத் தலா 1.22 லட்சமும் (2,500 நியூசி. டாலர்) இனிமேல் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆடவர், மகளிர் என இரு அணியினருக்கும் சம ஊதியம் வழங்க முடிவெடுத்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
விம்பிள்டன் பாரம்பரிய ஆடை வழக்கத்தை தகர்த்த ஆஸி. வீரர்
விம்பிள்டன் அரங்கில் பாரம்பரிய வழக்கமாக வீரர்கள் வெள்ளை நிறத்திலான ஆடை அணிவது வழக்கம். இப்போது அதனை தகர்த்துள்ளார் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிர்கியோஸ். அத்துடன், அது தனது விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் உலகின் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்று விம்பிள்டன். கடந்த 1877 முதல் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்தத் தொடரில் விளையாடும் வீரர்கள் வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிந்து விளையாடுவார்கள். அது ஒரு பாரம்பரிய நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி தலை முதல் காலணி வரை வீரர்களும், வீராங்கனைகளும் தாங்கள் அணியும் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் (ஸ்போர்ட்ஸ் பேண்ட் போன்றவை) என அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். இது விம்பிள்டனின் 145 ஆண்டு கால மரபு. அண்மையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தன் தாய்நாட்டிற்கு ஆதரவாக நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான ரிப்பனை தனது ஆடையில் அணிந்து விம்பிள்டன் போட்டியில் விளையாடி இருந்தார் உக்ரைன் வீராங்கனை லெசியா சுரென்கோ (Lesia Tsurenko). அவருக்காக விதிகள் தளர்த்தப்பட்டது.
இந்நிலையில், விம்பிள்டன் தொடரின் பாரம்பரிய வழக்கத்தை தகர்த்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ். அவர் சிகப்பு நிறத்தில் தொப்பி மற்றும் சிகப்பு நிற ஷூவை அணிந்திருந்தார். இருந்தாலும் இதனை ஆட்டத்தில் விளையாடியபோது செய்யாமல், ஆட்டம் முடிந்த பிறகு அவர் கோர்ட்டுக்குள் பேட்டி கொடுத்தபோதுதான் செய்திருந்தார். களத்தில் விளையாடியபோது அவர் வெள்ளை நிற ஷூ தான் அணிந்திருந்தார். இந்த சம்பவம் ஜூலை 4-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், அவர் சிலி வீரரை எதிர்கொள்கிறார். நடப்பு விம்பிள்டனில் அவர் யாருமே எதிர்பார்க்காத வகையில் டார்க் ஹார்ஸ் போல விளையாடி வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.
-
கிலோ கணக்கில் தங்கம் கடத்தல்: நேபாளத்தில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது
18 Mar 2024காத்மண்டு : தங்கம் கடத்தல் விவகாரத்தில் நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளார்.