முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரேநாளில் 47 பேர் பலி: இந்தியாவில் 20,038 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2022      இந்தியா
corona-------2022 07 15

Source: provided

புதுடெல்லி: நாட்டில் வியாழக்கிழமை கொரோனா பாதிப்பு 20,139 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,038 ஆக குறைந்துள்ளது. 47 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது., வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 20,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 20,038 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,10,024-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,39,073 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.31 சதவீதமாக உள்ளது. நாள்தோறும் பாதிப்பு விகிதம் 4,44 சதவீதமாக உள்ளது. தொற்று பாதித்தவர்களில் புதிதாக 47 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,25,604 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 16,994 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,30,45,350-ஆக அதிகரித்துள்ளது என்று குணமடைந்தோர் விகிதம் 98.49 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,99,47,34,994 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 18,92,969 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து