முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.14 ஆயிரத்து 850 கோடி செலவில் உ.பி.யில் நான்கு வழிச்சாலையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

சனிக்கிழமை, 16 ஜூலை 2022      இந்தியா
Modi 2021 11 30

Source: provided

லக்னோ : உ.பி.யில் சுமார் 14 ஆயிரத்து 850 கோடி செலவில் அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையை 

பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது மோடி பேசுகையில் மோடி-யோகி அரசு வளர்ச்சியை உத்தரப்பிரதேச நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் உறுதி செய்யும் என்று தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச விரைவுச்சாலை தொழில் வளர்ச்சி ஆணையம் சார்பில் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் இந்த சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

சுமார் 14 ஆயிரத்து 850 கோடி செலவில் 296 கிமீ நீளத்தில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சித்ரகூடில் உள்ள கோண்டா கிராமத்தில் உள்ள என்.எச்-35-ல் தொடங்கும் இந்த சாலையானது, பண்டா,மஹோபா, ஹமிர்பூர், ஜலான், ஔரையா மற்றும் எட்டாவா ஆகிய 8 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. அதன்பின், ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையுடன் இணைகிறது.

இந்தச் சாலையை நேற்று உ.பி. மக்களுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. அப்போது அவர், "இந்த விரைவுச் சாலை புந்தல்கண்டை வளர்ச்சி, சுய வேலைவாய்ப்பு, இன்னும் பிற தொழில் வாய்ப்புகளுக்கு இட்டுச் செல்லும். உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரமும், சாலை விரிவாக்கமும் சரி செய்யப்பட்டால் இந்த மாநில எல்லா சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறும்.

பாஜக ஆட்சியில் இந்த இரண்டுமே தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு வெகுவாக மேம்பட்டுள்ளது. மோடி-யோகி அரசு வளர்ச்சியை நகரங்களுக்கு மட்டுமல்ல கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும்" என்றார்.

இதற்கு முந்தைய ஆட்சியின்போது சரயு திட்டத்தை நிறைவேற்ற 40 ஆண்டுகள் ஆனது. கோரக்பூர் உரத் தொழிற்சாலை 30 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. அர்ஜூன் அணைத் திட்டம் நிறைவேற 12 ஆண்டுகளாயிற்று. அமேதி ரைஃபிள் தொழிற்சாலைக்கு ஒரு போர்டு மட்டுமே வைத்திருந்தனர்.

ரேபெரேலி ரயில் பெட்டி தொழிற்ச்சாலை ரயில் பெட்டிகளுக்கு பெயின்ட் அடிப்பதை மட்டுமே செய்து வந்தன. ஆனால் இப்போது உத்தரப்பிரதேசத்தில் உட்கட்டுமானம் மேம்பட்டுள்ளது. உ.பி.யின் அடையாளம் மாறிவருகிறது" என்று பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து