முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார நெருக்கடி: பதவியை ராஜினாமா செய்தார் இத்தாலி பிரதமர்

வியாழக்கிழமை, 21 ஜூலை 2022      உலகம்
itali-cm-----2022-07-21

Source: provided

ரோம்: பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியா டிராகி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 2021-ம் ஆண்டு அதிபர் மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடி காரணமாக இத்தாலியில் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக இத்தாலி மோசமான பொருளாதார நிலையை எதிர்கொண்டுள்ளது.   

இதனைத் தொடர்ந்து, மரியா டிராகிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் இதனைக் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. அதே வேளையில், தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று மரியா டிராகி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் தனது ராஜினாமாவை அதிபர் மாளிகையில் அளித்ததாகவும், அதனை ஏற்று கொண்டதாகவும் இத்தாலி அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா அறிவித்துள்ளார்.  ராஜினாமா குறித்து டிராகி வெளியிட்ட அறிவிப்பில், 

இந்தக் காலக்கட்டத்தில் நாம் இணைந்து செய்த அனைத்து பணிகளுக்கும் நன்றி. நான் எனது ராஜினாமாவை அதிபரிடம் அளித்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.  ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார நிலைக்கு தள்ளப்பட்டுது  குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து