முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவிகளிடம் அத்துமீறி சோதனை: கேரளாவில் நீட் தேர்வு மைய அதிகாரிகள் மேலும் 2 பேர் கைது

வியாழக்கிழமை, 21 ஜூலை 2022      இந்தியா
neet-----2022-07-21

Source: provided

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆயுர் நீட் தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மாணவிகளிடம் சோதனை நடத்தியது தொடர்பாக நீட் தேர்வு மைய அதிகாரிகள் மேலும் 2 பேர் கைது நேற்று செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் ஆயுர் பகுதியில் கடந்த 17-ந்தேதி நீட் தேர்வு நடந்தது. இத்தேர்வு எழுத சென்ற மாணவிகளிடம் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்தனர். இதில் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஒருவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆயுர் நீட் தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த நிலையில் நேற்று மேலும் 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் நீட் தேர்வு மைய பார்வையாளராகவும், இன்னொருவர் தேர்வு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியவர்கள் ஆவர். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கேரளாவில் இப்பிரச்சினையை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

இதுபற்றி கேரள அரசு மத்திய மந்திரிக்கும், தேசிய திறனறி தேர்வு மையத்திற்கும் புகார் மனு அனுப்பியது. அதன்பேரில் ஆயுர் நீட் தேர்வு மையத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி விசாரிக்க உண்மை கண்டறியும் குழுவை நீட் தேர்வு திறனறி மையம் அனுப்பி உள்ளது. அவர்கள் கேரளாவில் நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து