முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ. 12-ம், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2022      இந்தியா
CBSE----------22-07-22

Source: provided

புதுடெல்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மாணவர்கள் தேர்வு முடிவை results.cbse.nic.in அல்லது parikshasangam.cbse.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறியலாம்.

பிளஸ் 2 தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று மதியம் 2 மணிக்கு வெளியானது. அவர்களும் மேற்கூறிய இணையதளங்களிலேயே தேர்வு முடிவை அறியலாம்.

சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 91.25% பேர். மாணவிகள் 93% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 98. 83 % தேர்ச்சி பெற்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மண்டலம் 97.79% பேர் விகிதத்துடன் 3 வது இடத்தை பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விடவும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவர்களில் 94.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவர்களில் 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே வேளையில் 95.21% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மூன்றாம் பாலினத்தவர் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இவ்வாண்டுக்கான பிளஸ்-2 தேர்வு முடிவு 2 வாரங்களுக்கு முன்பாக வெளியானது. இதற்கு முன்னதாகவே பெரும்பாலான அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் இளங்கலை, இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை கல்லூரி நிர்வாகங்கள் பெற்றன.

ஆனால், பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான பிறகு அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. இதன்படி ஜூலை 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்நிலையில் பிளஸ்-2 மத்திய பாடப்பிரிவுக்கான (சி.பி.எஸ்.இ.) தேர்வு முடிவு தாமதத்தால் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் அது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து