முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி சுடும் போட்டி: நடிகர் அஜித் பங்கேற்பு

புதன்கிழமை, 27 ஜூலை 2022      சினிமா
Ajith 2022 07 27

திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் திரைப்பட நடிகர் அஜித் பங்கேற்றார்.

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் அமைந்துள்ளது. இதில், 47 ஆவது மாநில துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய இப் போட்டிகள் தொடர்ந்து ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1,200 பேர் பங்கேற்றுள்ளனர். 

10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் அளவில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 16,19,21, மற்றும் 21 - 45, 45-60 வயதினருக்கான பிரிவின் கீழ் போட்டியாளர்கள பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் திரைப்பட நடிகர் அஜித் கலந்து கொண்டார். இதில் பங்கேற்க கார் மூலம் புதன்கிழமை காலை திருச்சி வந்தார். முதலாவதாக சீனியர் மாஸ்டர் பிரிவில் பங்கேற்ற அவர்,தொடர்ந்து 4 பிரிவிகளிலும் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறார். 

அஜித் வருகையை முன்னிட்டு ரைபிள் கிளப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிளப்புக்கு வெளியே பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ரசிகர்கள் ஆராவாரம் எழுப்பியபடி அவரைக் காண காத்திருகின்றனர்.  போட்டியினுடைய துப்பாக்கி சுடும் தளத்திலிருந்து மேலாளர் அறைக்கு அவர் வந்தபோது வெளியே காத்திருந்த ரசிகர்கள் அவரைக் காணும் ஆவலில் கிளப் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதில் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து