முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன், மத்திய அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2022      இந்தியா
Amitsha 2022 07 29

Source: provided

புதுடெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஸ்மிரிதி இரானி நேற்று சந்தித்து பேசியது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திரெளபதி முர்மு குறித்து மககளவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த ராஷ்டிரபட்னி என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இந்த பிரச்சினை காரணமாக எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் போட்டு போட்டு கோஷமிட்டதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் நேற்றும் முடங்கின. 

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜனாதிபதி திரெளபதி முர்முவை அவரது மாளிகையில் சந்தித்து பேசினார். ஜனாதிபதி அழைப்பின் பேரில் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். எனினும் இந்த சந்திப்பின் முழு விபரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர் இரானியும் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்தார்.

ஜனாதிபதி அழைப்பின்பேரில் அவரை சந்தித்தாக இரானியும் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில் மத்திய அமைச்சர்கள் இருவர் அடுத்தடுத்து ஜனாதிபதியை சந்தித்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து