முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ஒரே வாரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 12 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022      தமிழகம்
Jail 2022 01 05

Source: provided

சென்னை : சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் தொடர்ச்சியாக குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்து, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.

இதையடுத்து பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அந்தோணி, மணிகண்டன்,  ஐய்யப்பன் ஆகியோரை கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்த வண்ணாரப்பேட்டை போலீசார் அவர்கள் 3 பேரையும் கடந்த 26-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அதே போல திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சதீஷ்,  இவரது சகோதரர்கள் முரளி, தினேஷ்,  இவர்களது தந்தை கிருஷ்ணா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ்  ஆகியோர் சுரேஷ் என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நீலங்கரையைச் சேர்ந்த சந்தோஷ்,  ஹக்கீம்,  சைதாப்பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார், 

துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான்பாஷா ஆகியோர் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வழக்கிலும் கைது செய்யப்பட்டனர். இவர்களை போலீசார் கடந்த 27-ம்தேதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அந்த வகையில், சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூலை 29-ம் தேதி வரை 223 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து