முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு:மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் மீண்டும் திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022      தமிழகம்
mettur-dam-----2022-07-21

Source: provided

சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையின் 16 கண் மதகு வழியே மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகிய ஆறுகளில் இருந்தும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 23,000 கன அடியில் இருந்து 25,500 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும் தண்ணீரும் திறக்கப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் ஏறத்தாழ 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன.  தற்போது நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் , நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக மேட்டூர் அணை கடந்த  16-ம் தேதி காலை தன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனை தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீடித்ததால் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 25-ம் தேதி வரை 16 கண் மதங்கள் வழியாக திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து ஆனது வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியாக குறைந்ததால் கடந்த 25-ம் தேதி இரவு முதல் அணையை ஒட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நேற்று காலை அணைக்கு நீர்வரத்து ஆனது மீண்டும் வினாடிக்கு 25,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் அணையின் உபரி நீர் 16 கண் மதங்கள் வழியாக மீண்டும் 2500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வருவாய் துறை சார்பில் மேட்டூர் தாசில்தார் குமார் சாமி தலைமையில் டாம் டாம் மூலம் தாழ்வான பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து