முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பொதுமக்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு: 4 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      உலகம்
Gan 2022-06-14

Source: provided

வாஷிங்டன் ; அமெரிக்காவில் ஓஹியோ நகரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

அமெரிக்காவில் ஓஹியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபராக கருதப்படும் ஸ்டீபன் மார்லோவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்க புலனாய்வு அமைப்பு(எப் பி ஐ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் கண்மூடித்தனமாக பொதுமக்களை சுட்டு விட்டு வெள்ளை நிற காரில் தப்பித்து  விட்டதாக போலீசார் கூறியுள்ளனர். 

அமெரிக்காவின் டாய்டன் நகருக்கு அருகில் அமைந்துள்ள சிறிய நகரமான பட்லர் டவுன்ஷிப்பில் சுமார் 8000 பேர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து