முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது நினைவு தினம்: சென்னையில் நடந்த அமைதி பேரணி: மெரினா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-3 2022-08-07

Source: provided

சென்னை : சென்னை மெரினாவிலுள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் தி.மு.க. சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படாத நிலையில், மாநிலம் முழுவதும் நேற்று கருணாநிதி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.  அந்தவகையில், அண்ணா சாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெற்றது. இதனையொட்டி அண்ணா சாலையிலுள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனை அமைந்துள்ள பகுதியிலிருந்து வாலாஜா சாலை வழியாக மெரினாவிலுள்ள கருணாநிதி நினைவிடம் வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.  இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, எம்.பி. கனிமொழி, உள்ளிட்டோருடன் மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு. எ.வ.வேலு, மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்து கொண்டனர். 

அமைதிப் பேரணியையொட்டி பலத்த காவல் துறை பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  கருணாநிதி நினைவிடத்தில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அங்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  அதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்களும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், தொண்டர்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து