முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து 26-வது நாளாக நீடிக்கும் : மேட்டூர் அணையின் நீர்மட்டம்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      தமிழகம்
mnetturccdam--------2022-08--11

Source: provided

சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 26-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. 

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் தமிழகத்தில் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறுகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக கடந்த 16-ம் தேதி மேட்டூர் அணை நிரம்பி முழுக் கொள்ளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 26-வது நாளாக அணை நிரம்பிய நிலையில் உள்ளது.

காவிரியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  அணைக்கு நேற்று வியாழக்கிழமை காலை 8 நிலவரப்படி, வினாடிக்கு 1,40,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,40,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.  நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,17,000 கன அடி நீரும் திறக்கப்பட்டிருந்தது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து