முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரம்பரிய நெல் வகைகளை சேகரிப்பு செய்த பெண்ணுக்கு தமிழக அரசு விருது

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Sivaranjani 2022-08-14

Source: provided

சென்னை : பாரம்பரிய நெல் வகைகளை சேகரிப்பு செய்த பெண்ணுக்கு தமிழக அரசு விருது அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் நம்மாழ்வார் வழியை பின்பற்றி பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மீட்டெடுப்புகளை தமிழக அரசு அங்கீகரித்தது. அவரது மறைவுக்குப் பின் தற்போது சிவரஞ்சனி, சரவணகுமார் தம்பதியர் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய 1525 வகையான நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளனர்.

அதனை தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து அதனை அறுவடை செய்யது பாதுகாத்து வருகிறார்கள். இப்பணியை லாபநோக்கமின்றி சேவை மனப்பாண்மையில் அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டிருக்கிறார்கள். 

இவர்களது மீட்டெடுப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்  அரசு மாநில இளைஞர் விருது 2022 அறிவித்து உள்ளது. இந்த விருதினை இன்று சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

தமிழக அரசு பாரம்பரிய நெல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் சிவரஞ்சனி சரவணகுமாரின் செயலை பாராட்டி விருது வழங்கி உள்ளது. விருது பெற்ற சிவரஞ்சனியை ஏரளமான விவசாயிகள், பொதுமக்கள், சேவை சங்கங்கள், அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து