முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் 15 கிலோ மீட்பு என தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Gold 2021 11 23

Source: provided

சென்னை  சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் என்ற தனியார் வங்கிக்கு சொந்தமான நகைகடன் பிரிவு அலுவலகத்தில் இருந்து நேற்று முன்தினம்  15 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்ற நபரே இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை குற்றவாளிகள் என நிர்ணயித்து தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதில், பாலாஜி என்ற நபரை போலீசார் நேற்று  காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சக்திவேல் என்பவரிடமும் போலீசார் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில் பாதி அளவாக சுமார் 15 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து