முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமங்களில் கோயில் விழாக்களுக்கு காவல் துறை அனுமதி தேவையில்லை: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2022      தமிழகம்
madurai--high-court2022-08--11

கிராமங்களில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு போலீஸாரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என  ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் வலையப்பட்டியைச் சேர்ந்த சீனி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இந்த திருவிழா எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக நடைபெறும்.

இந்தாண்டு பொங்கல் திருவிழாவை ஆக.19 முதல் 20 வரை நடத்த முடிவு செய்துள்ளோம். திருவிழாவுக்கு அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளித்தோம். இதுவரை அனுமதி தரவில்லை. திருவிழாவுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது., கிராமங்களில் கோயில் திருவிழா நடத்த போலீஸாரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. பட்டு அரசி கோயில் திருவிழாவுக்கு கிராம மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் திருவிழா நடத்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து