முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, மின்வாரிய அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு : பொதுமக்களிடம் புகார்களை கேட்டறிந்தார்

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-2 2022-08-16

Source: provided

சென்னை : சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொது மக்களிடம் புகார்களை கேட்டறிந்தார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற மின் நகர்வோர் சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னக சேவை மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொலைபேசி வாயிலாக சேவை மையத்திற்கு தொடர்பு கொண்ட பொது மக்களிடம் புகார்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அப்போது "வணக்கம், நான் ஸ்டாலின் பேசுகிறேன் எந்த விதமான புகாருக்கு அழைத்துள்ளீர்கள்... உங்கள் புகார் சரி செய்யப்பட்டு விட்டதா.. " எனப்பேசி பொதுமக்களின் புகார்களை கேட்டறிந்தார். மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து