முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் 72 பேர் உயிரிழப்பு: இந்தியாவில் 12,608 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      இந்தியா
corona------------2022-08-18

Source: provided

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 12,608 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சில நாட்களாக உயர்ந்து வந்த தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் சற்று குறைந்தது. இந்தநிலையில் நேற்று 12 ஆயிரத்து 608 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் 9,062 ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 12,608 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 16,251 பேர் குணமடைந்ததால் இந்தியாவில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4,36,70,315 ஆனது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,05,058 லிருந்து 1,01,343 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக பதிவானது. இந்தநிலையில், நேற்று ஒரே நாளில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 206 பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,08,95,79,722 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 38,64,471 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து