முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி பஸ் மும்பையில் அறிமுகம்

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      இந்தியா
ac-bus-2022-08-18

Source: provided

மும்பை: நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி வசதி கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பேருந்துப் போக்குவரத்தை, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று துவக்கி வைத்தார்.

இஐவி22 என்ற மின்சாரத்தில் இயங்கும் இந்த இரட்டை அடுக்குப் பேருந்து, 250 கி.மீ. தொலைவு வரை இயக்கப்படும் திறன் கொண்டது. இந்துஜா குழுமத்தின் அஷோக் லைலேண்ட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கம் இந்த இரட்டை அடுக்குப் பேருந்தில் அதிகபட்சமாக 65 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தானியங்கி கதவுகள் மற்றும் சிசிடிவி கேமரா வசதித கொண்டது.

முதற்கட்டமாக 200 மின்சாரத்தில் இயங்கும் இரட்டை அடுக்குப் பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டுக்குள் 50 பேருந்துகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து