முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திடீர் நெஞ்சுவலி: நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரர் அரசு மருத்துவமனையில் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2022      இந்தியா
Iqbal-Kaskar 2022 08 21

Source: provided

மும்பை : நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரர் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

மராட்டியத்தின் மும்பை நகரில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் பாகிஸ்தான் நாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு கடத்தும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது. தேடப்படும் பட்டியலிலும் அவர் வைக்கப்பட்டு உள்ளார். 

அவரது இளைய சகோதரர் இக்பால் கஸ்கர். பண மோசடி வழக்கு ஒன்றில் கடந்த பிப்ரவரியில் அவரை அமலாக்க துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, நவிமும்பைக்கு அருகேயுள்ள தலோஜா சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில், திடீரென நேற்று முன்தினம் அவர் அரசால் நடத்தப்படும் மும்பையிலுள்ள ஜே.ஜே. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி அதிகாரிகள் நேற்று கூறும்போது, 

கஸ்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இதய பாதிப்புகளுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கும் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்து உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து