முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் : அரியானா, பஞ்சாப் அரசுகள் ஒப்புதல்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2022      இந்தியா
Bhagwant-Singh 2022-08-14

Source: provided

சண்டிகர் : சண்டிகர் சர்வதேச விமான நிலையத்துற்கு பகத் சிங் பெயரை சூட்ட பஞ்சாப் மற்றும் அரியானா அரசுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. 

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முதல்வரானதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படங்களை வைக்க உத்தரவு பிறப்பித்தார்.  இதனையடுத்து சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயரை சூட்ட இருப்பதாக அவர் அறிவித்து இருந்தார்.  

இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

சண்டிகர் சர்வதேச விமான நிலையத்துற்கு பகத் சிங் பெயரை சூட்ட பஞ்சாப் மற்றும் அரியானா அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா இடையே நடந்த சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து