முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டசபையில் கெஜ்ரிவால் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து இன்று முடிவு

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2022      இந்தியா
kejriwal 2022-08-29

Source: provided

புதுடெல்லி: டெல்லி சட்டசபையில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. தீர்மானம் குறித்து இன்று முடிவெடுக்கப்படுகிறது.

பாஜகவின் "ஆபரேஷன் தாமரை" முயற்சி, டெல்லியில் "ஆபரேஷன் சேறு"ஆக மாறியுள்ளது என்பதை பொதுமக்கள் முன் நிரூபிக்கும் வகையில், சட்டசபையில் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வர விரும்புவதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

பாஜகவின் போராட்டம் ஊழலுக்கு எதிரானது அல்ல, அக்கட்சியின் "ஆபரேஷன் தாமரை" ஏமாற்றி ஆட்சியைப் பிடிப்பதற்கான வழியாகும் என்று அவர் கடும் விமர்சனங்களை கூறியிருந்தார். பாஜக 40 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை குறிவைத்து, அவர்கள் கட்சி மாற தலா ரூ.20 கோடி வழங்க முயற்சித்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், டெல்லி சட்டசபையின் சிறப்புக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்கள் உள்ளனர், அதே நேரத்தில் பாஜகவுக்கு 8 பேர் உள்ளனர். அவையில் கடும் அமளி நிலவியதால், சிறப்புக் கூட்டத் தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று கெஜ்ரிவால் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து