முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? - 5-ம் தேதி முடிவுகள் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2022      உலகம்
Rishi-Listrasu 2022 09 02

Source: provided

லண்டன் : இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் வரும் 5-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது தெரியவரும்.  

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். புதிய தலைவர் (பிரதமர்) பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கும், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் லிஸ்டிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. பிரதமர் பதவிக்கான ஓட்டுப்பதிவு நேற்று 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. 

1.60 லட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் தபால் மற்றும் இணையவழியில் வாக்கு அளித்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 5-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால் வெள்ளையர் அல்லாத முதல் இங்கிலாந்து பிரதமர் என்ற சிறப்பைப் பெறுவார். இவர் இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனர் நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி தம்பதியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து