முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைலாசாவில் போதிய மருத்துவ வசதியில்லை: தஞ்சம் கோரி இலங்கை அதிபர் ரணிலுக்கு நித்யானந்தா கடிதம்

சனிக்கிழமை, 3 செப்டம்பர் 2022      உலகம்
Nithyananda 2022 09 03

Source: provided

கொழும்பு : இந்தியாவில் பாலியல் குற்ற வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா இலங்கையில் தஞ்சம் கோரி அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தியாவில் இருந்து நித்யானந்தா கடந்த 2018-ல் திடீரென தலைமறைவானார். தனி தீவு ஒன்றை விலைக்கு வாங்கி கைலாசா என பெயரிட்டு ஆட்சி செய்து வருவதாக அவ்வப்போது வீடியோக்களில் கூறி வரும் நித்யானந்தாவின் உடல்நிலை அண்மையில் மிகவும் மோசமடைந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கைலாசா தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெயரில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், நித்யானந்தா உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் அவருக்கு அவசரமாக மருத்துவ சிகிச்சை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ சிகிச்சைக்கான செலவை கைலாசா அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. நித்யானந்தாவுக்கு தஞ்சம் அளித்தால் இலங்கைக்கு தேவையான முதலீட்டையும் அவர் வழங்குவார் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து