முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. அலுவலகம் வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சி.வி.சண்முகம் வாக்குமூலம்

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2022      தமிழகம்
CV-Shanmugam 2022 09 14

Source: provided

சென்னை : அ.தி.மு.க. அலுவலகம் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சி.வி.சண்முகம் வாக்குமூலம் அளித்தார்.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த ஜூலை 11-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மோதல் வெடித்தது. இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் சரமாரியாக கற்களை வீசி தாக்கி கொண்டனர். 

இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. .பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 2 முறை நேரில் சென்று விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கிருந்த பல்வேறு தடயங்களை சேகரித்தனர். மோதல் சம்பவம் நடைபெற்ற போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளையும் கைப்பற்றினர். இதனை வைத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரை அடையாளமும் கண்டுள்ளனர்.

இது தொடர்பாக புகார்தாரரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பல்வேறு தகவல்களை திரட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்துக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்றனர்.

அங்கு வைத்து மோதல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய போலீசார் அது தொடர்பான தகவல்களை முழுமையாக சேகரித்துள்ளனர். குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது குறித்தும், அப்போது ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பாகவும் சி.வி.சண்முகம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சி.வி.சண்முகம் விரிவான பதிலை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். இந்த வழக்கில் புகார்தாரர்களிடம் மட்டுமே இதுவரை விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தலைமை கழக மேலாளரான மகாலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரிடமும் பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றனர். தற்போது சி.வி.சண்முகத்திடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து