முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தினம்: டுவிட்டரில் இ.பி.எஸ். இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2022      தமிழகம்
EPS 2022 09 13

Source: provided

சென்னை : ரெட்டைமலை சீனிவாசனின் நினைவு தினத்தையொட்டி டுவிட்டரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் ரெட்டைமலை சீனிவாசனின் 77-வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவுதினத்தையொட்டி பல்வேறு தலைவர்கள் அவரின் புகழை நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம் என்று முழங்கி, விளிம்புநிலை மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து, வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காக போராடிய சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசனின் நினைவுநாளில் அவர்தம் பெரும்புகழை போற்றி நினைவு கூர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து