முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ஜினீயரிங் படிப்புக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு நிறைவு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      தமிழகம்
Engineering 2022-09-27

Source: provided

சென்னை: என்ஜினீயரிங் இரண்டாம் சுற்று கலந்தாய்வில், மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது.  

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 148,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கியது. முதல்கட்ட கலந்தாய்வில் சிறப்புப் பிரிவினருக்கு 668 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்பின் கடந்த 10-ம் தேதி தொடங்கிய பொதுப்பிரிவு கலந்தாய்வில் முதல் சுற்றில் பங்கேற்ற மாணவர்களில் 10,340 பேருக்கு இடங்கள் உறுதி செய்யப்பட்டன. 

எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு கடந்த 25-ம் தேதி தொடங்கியது. அதன்படி, மாணவர்கள் கல்லூரிகளை தகுதியின் அடிப் படையில் இணையவழியில் தேர்வு செய்து வந்தனர். இதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. மேலும் மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு இன்று 28-ம் தேதி வெளியிடப்படும். அதற்கு மாணவர்கள் நாளை 29-ம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதனடிப்படையில் கல்லூரிகளில் சேருவ தற்கான சேர்க்கைக் கடிதம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து