தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் கைதானவர் ஸ்ரீதேவி என்ற பெயரில் மந்திரவாதி லீலைகள் நடத்திய தற்போது விசாரணையல் தெரியவந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ரோஸ்லி (வயது 50), தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (52) ஆகியோர் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் காணாமல் போனார்கள். காணாமல் போன பத்மாவை போலீசார் தேடி வந்த நிலையில் அவரை முகமது ஷபி என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.
போலீசார் முகமது ஷபியை கைது செய்து விசாரித்தபோது, அவர் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த பகவல் சிங்-லைலா தம்பதியின் வீட்டுக்கு அழைத்து சென்று பத்மாவை நரபலி கொடுத்தது தெரியவந்தது. இதுபோல எர்ணாகுளத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் மாயமான ரோஸ்லியும் இதுபோல நரபலி கொடுக்கப்பட்டதையும் முகமது ஷபி ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் முகமது ஷபியின் நண்பர்களான பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் போலீசார் நரபலி நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று தடயங்களை சேகரித்தனர். இதில் பகவல் சிங் வாழ்க்கையில் செல்வம் பெருக பூஜை நடத்தியதும், இதற்காக ரோஸ்லி மற்றும் பத்மாவை கடத்தி வந்து நரபலி கொடுத்ததாகவும் கூறினர். நரபலி கொடுக்கும் முன்பு அவர்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதாகவும், நரபலி கொடுத்த பின்பு அவர்களின் உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டதாகவும் கூறி அதிரவைத்தனர்.
மேலும் நரபலி சம்பவம் வெளியான பின்னர் இதுபோன்று வேறு யாரும் நரபலி கொடுக்கப்பட்டார்களா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் எர்ணாகுளம் மட்டுமின்றி கேரளா முழுவதும் இந்த காலகட்டத்தில் சுமார் 26 பெண்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இவர்களில் யாராவது நரபலி கொடுக்கப்பட்டார்களா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்காக கைதான 3 பேரையும் காவலில் எடுக்க போலீசார் மனு செய்தனர். இதில் அவர்களை 12 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இந்த 12 நாட்களிலும் போலீசார் முகமது ஷபி மற்றும் லைலா, பகவல் சிங் ஆகிய 3 பேரையும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர்.அப்போது நரபலி சம்பவம் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஷபியை செல்லமாக ரஷீத் என்று அவரின் நண்பர்கள் அழைத்து வந்துள்ளனர். எர்ணாகுளத்தில் இருக்கும் பெரும்பாவூர் பகுதியில் இவர் வசித்து வந்துள்ளார். இவர் வெறும் 6ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதேபோல் 3 வயது பெண் பேர குழந்தை ஒருவரும் உள்ளார். இவர் ஒரு பாலியல் சைக்கோ என போலீசார் கூறி உள்ளனர்.
பேஸ்புக்கில் ஸ்ரீதேவி என்ற பெயரில் ஒரு பொய்யான கணக்கை உருவாக்கி அதன் மூலம் இவர் பகவல் சிங் மற்றும் லைலா தம்பதிகளுடன் பேசி உள்ளார். ஸ்ரீதேவி என்ற பெண்ணின் புகைப்படத்தை வைத்து. பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுடன் பேசி உள்ளார். பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுக்கு ஷபிதான் ஸ்ரீதேவி என்பதே இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கருவேப்பிலை குழம்பு.![]() 1 day 1 hour ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 5 days 5 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 1 day ago |
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓ. பன்னீர் செல்வம் தரப்புவேட்பாளர் செந்தில்முருகன்
01 Feb 2023சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை பெயரை அறிவித்தார் ஓ.பி.எஸ். அங்கு செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
-
டி-20 கிரிக்கெட் தரவரிசை: அதிக புள்ளிகளை பெற்ற 2-வது வீரராக சூர்யகுமார்
01 Feb 2023துபாய் : தற்போது வெளியிடப்பட்ட டி20 தரவரிசையிலும் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 47 ரன்கள் எடுத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-02-02-2023.
02 Feb 2023 -
மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு மகிளா சம்மான் பச்சாட் பத்ரா புதிய சேமிப்பு திட்டம் அறிவிப்பு : மூத்த குடிமக்களுக்கு டெபாசிட் தொகை ரூ.30 லட்சமாக அதிகரிப்பு
01 Feb 2023புதுடெல்லி : மத்திய பட்ஜெட் 2023-24-ல் பெண்களுக்கான ஒருமுறை சேமிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: ஷ்ரேயாஸ் வெளியே..! சூர்யகுமார் உள்ளே..?
01 Feb 2023நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐய்யர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வருமான வரி முறையில் கணிசமான மாற்றங்கள் : நிர்மலா சீதாராமன் பேட்டி
01 Feb 2023புதுடெல்லி : வரி செலுத்துபவர்களைக் கவரும் வகையில், கணிசமான மாற்றங்களுடன் புதிய வருமான வரி உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவி
-
அரசுத்துறை சேவைகளில் பொது அடையாள அட்டையாக இனி பான் கார்டு பயன்படுத்தப்படும்
01 Feb 2023புதுடெல்லி : அரசுத்துரை சேவைகளில் பான் கார்டை பொது அடையாள அட்டையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.
-
மத்திய பட்ஜெட் உரையில் ஏழைகளுக்கு ஏதும் இல்லை : காங்கிரஸ் கடும் விமர்சனம்
01 Feb 2023புதுடெல்லி : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஏதும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
-
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்தியர்கள் பிப்.10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
01 Feb 2023ராமேசுவரம் : கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க பிப்.10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
5-வது முறையாக பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த 6-வது நிதியமைச்சர்
01 Feb 2023புதுடெல்லி : மன்மோகன் சிங், அருண் ஜெட்லி மற்றும் ப சிதம்பரம் போன்ற ஜாம்பவான்களைத் தொடர்ந்து, ஐந்து முறை தொடர்ச்சியாக பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் சுதந்திர இந
-
இஷான் கிஷன், அர்ஷ்தீப்பை பாராட்டிய அனில் கும்ப்ளே
01 Feb 2023பெங்களூரு : இந்திய இளம் வீரர்களான இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரையும் பாராட்டிப் பேசியுள்ளார் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே.
-
ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல்: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு : சென்னை ஐகோர்ட்டில் சிபி.சி.ஐ.டி. தகவல்
01 Feb 2023சென்னை : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவடைந்துள்ளது. ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சிபி.சி.ஐ.டி.
-
வருமான வரியில் அடுக்குகள்: வரியை கணக்கிடுவது எப்படி?
01 Feb 2023புதுடெல்லி : புதிய அறிவிப்பின் கீழ் வரி செலுத்துவோருக்கு ரூ.
-
பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கவில்லை: பார்லி. வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்
01 Feb 2023புதுடெல்லி : மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து நேற்று தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
பட்ஜெட்டில் இ-கோர்ட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு : மத்திய சட்ட அமைச்சர் வரவேற்பு
01 Feb 2023புதுடெல்லி : ரூ.7 ஆயிரம் கோடி இ-கோர்ட்திட்ட ஒதுக்கீடு நீதி வழங்கல் நடைமுறையை மேம்படுத்தும் என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ பேசியுள்ளார்.
-
எனது இன்ஸ்டா பக்கம் முடங்கியது: மெஸ்ஸி
01 Feb 2023அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி. இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற உலக பிரபலங்களில் மெஸ்ஸியும் ஒருவர்.
-
புதிதாக 50 விமான நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும் : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2023புதுடெல்லி : நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கவில்லை: மத்திய பட்ஜெட் தமிழக மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது : முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
01 Feb 2023சென்னை : ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்துள்ள 2023-24-ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டம் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட
-
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிச்சரிவு: பனிச்சறுக்கு வீரர்கள் 2 பேர் பலி
01 Feb 2023ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டைச் சேர்ந்த 2 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்.
-
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2023புது டெல்லி, : பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் நிதி இந்த அண்டு 66 சதவீதம் அதிகமாக ஒதுக்கி மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறத
-
ஜனாதிபதி திரெளபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2023புதுடெல்லி : மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்படும் முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை சந்தித்தார்.
-
சிகரெட் விலை உயர்கிறது
01 Feb 2023புதுடெல்லி : சிகரெட்டுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
-
பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த சுற்றுலா துறைக்கு அதிக முன்னுரிமை : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2023புதுடெல்லி : நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த சுற்றுலாத் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
-
பட்ஜெட் உரையின் போது பாராளுமன்றத்தில் எதிரொலித்த 'மோடி' 'ஜோடோ' முழக்கங்கள்
01 Feb 2023புதுடெல்லி : பாராளுமன்றத்தில் பட்ஜெட் உரையின் போது'மோடி' மற்றும் 'ஜோடோ' முழக்கங்கள் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டன.
-
ஏழை, நடுத்தர மக்களின் கனவுகளை நனவாக்கும்: வளர்ந்த இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் பட்ஜெட் : பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு
01 Feb 2023புதுடெல்லி : வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை மத்திய பட்ஜெட் அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.