முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கர் துணை சபாநாயகர் மாரடைப்பால் மரணம்

ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022      இந்தியா
Manoj-Sinha 2022--10-16

Source: provided

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநில சட்டசபை துணை சபாநாயகர் மாரடைப்பால் மரணமடைந்தார். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனோஜ் சின்ஹா மந்தவி செயல்பட்டு வந்தார். மனோஜ் கன்கீர் மாவட்டம் பானுபிரதாபூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். 

இந்நிலையில், 58 வயதான மனோஜ் சின்ஹாவுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடந்து அவர் தம்தரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மாரடைப்பு ஏற்பட்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் சின்ஹா நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அம்மாநில முதல்வர், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து