முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவாலியர் விமான நிலைய விரிவாக்க பணிகள்: அமித்ஷா அடிக்கல் நாட்டினார்

ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022      இந்தியா
Amit-Shah 2022--10-16

Source: provided

போபால் : மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று அடிக்கல் நாட்டினார். 

.குவாலியர் விமான நிலையத்தில் ரூ. 446 கோடி மதிப்பில், சுமார் 20 ஆயிரம் சதுர பரப்பளவில் புதிய விமான முனையம் கட்டப்பட உள்ளது. தற்போது உள்ள விமான நிலைய முனையம் 3 ஆயிரத்து 500 சதுர பரப்பளவில் அமைந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் மற்றும் புதிய முனையம் கட்டும் பணிகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர். விமான நிலைய விரிவாக்கத்திற்கு பிறகு 13 விமானங்களை இங்கு நிறுத்தலாம் என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து