முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருணாசலில் ஹெலிகாப்டர் விபத்து: 2 ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்பு

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2022      இந்தியா
Army-Helicopter 2022-10-21

Source: provided

இடாநகர் : அருணாசலப் பிரதேசம் மேல் சியாங் மாவட்டத்தில் நேற்று விபத்துக்குள்ளான துருவ் ஹெலிகாப்டரில் பயணித்து பலியான இரண்டு ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில், இதுவரை இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மூன்றாவது உடலைத் தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் ஐந்து பேர் பயணம் செய்துள்ளனர். விபத்துக்குள்ளான இடம் சாலை வழியாக தொடர்பு கொள்ள முடியாத நிலையில், மீட்புப் படையினர் கடும் வனப்பகுதிக்குள் நடந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து