முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒற்றுமை பயணத்தின் போது ராகுல் சிறுவர்களுடன் ஓட்டப்பந்தயம்

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2022      இந்தியா
Rahul 2022-10-30

Source: provided

அமராவதி, ; தெலுங்கானாவில் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது, சிறுவர்களுடன் ராகுல் காந்தி ஓட்டப்பந்தயம் விளையாடினார்.  

இந்திய ஒற்றமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி துவங்கிய இந்த பாதயாத்திரை கடந்த 23-ம் தேதி கர்நாடகாவில் இருந்து தெலுங்கானாவில் நுழைந்தது. தீபாவளி பண்டிகையொட்டி, யாத்திரை 3 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 27-ம் தேதி  மீண்டும் பாதயாத்திரை துவங்கியது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் கொல்லப்பள்ளியில் ராகுல்காந்தி யாத்திரையை துவங்கினார். அவர், கொல்லப்பள்ளி முதல் சோலிபூர் வரை மேற்கொள்ள உள்ளார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

இந்தநிலையில், தெலுங்கானாவில் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது,  ராகுல் காந்தி சிறுவர்களுடன் ஓட்டப்பந்தையம் விளையாடினார். முன்னதாக நடன கலைஞர்களுடன் பதுகம்மா நடனமாடி ராகுல் காந்தி உற்சாகபடுத்தினார். ராகுலின் ஒற்றுமை பயணம் வரும் 7-ம் தேதி மராட்டியம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நவம்பர் 4-ம் தேதி யாத்திரைக்கு ஓய்வு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து