முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜாராத் தொங்கு பால விபத்து: இருவரை தேடும் பணி தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2022      இந்தியா
Gujarat 2022-11-01

குஜராத் தொங்கு பாலம் விபத்தில் காணாமல் போன இருவரைத் தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

மோர்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் நதிக்குள் விழுந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 135-ஆக ஆனது.

மேலும் தற்போது 17 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் காணாமல்போன 2 பேரைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.  12 படகுகளுடன் 125 பேர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து