முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொங்கு பால விபத்தில் 142 பேர் பலி: குஜராத்தில் மாநில தழுவிய ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

புதன்கிழமை, 2 நவம்பர் 2022      இந்தியா
Gujarat 2022-11-02

Source: provided

காந்திநகர் : குஜராத் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நேற்று மாநில அளவில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

மோர்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் நதிக்குள் விழுந்தனர். இதில், 142 பேர் பலியானர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் நேற்று அனைத்து நிகழ்ச்சி மற்றும் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டு, தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டது.  நேற்று காலை ஆமதாபாத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து